தாமரைப்பாக்கம் துணை மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து


பிரதிநிதித்துவ படம்

திருவள்ளூர்: தாமரைப்பாக்கம் அருகே துணைமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உண்டான தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே வானியன்சத்திரம் பகுதியில் தமிழ்நாடு மின்வாரியத்தின் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திடீரென இன்று இங்குள்ள மின்மாற்றியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. தகவல் அறிந்து செங்குன்றம், மணலி, மாதவரம் என 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரையும், ரசாயன நுரையையும் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து மின்மாற்றியில் பற்றிய தீ அருகில் உள்ள மின் சாதனங்களுக்கு பரவாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். துணை மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

x