பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் கூடி மகிழ்ந்த காவல்துறையினர்


மதுரை: கடந்த 2000-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த காவல் துறையினர் சுமார் 24 ஆண்டுக்கு பிறகு மதுரையில் ஒன்றுகூடி மகிழ்ந்தனர்.

தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 2000-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த பலர் மதுரை உட்பட பல்வேறு இடங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள் தொடர்ந்து ‘வாட்ஸ்அப்’ குழுக்கள் மூலம் ஒருங்கிணைந்து அவ்வப்போது தகவல்களை பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தனியார் ஓட்டல் ஒன்றில் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதன்படி, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த காவலர்கள் சுமார் 24 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஒன்று கூடினர். பங்கேற்ற சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தங்களது பயிற்சி மற்றும் பணியின்போது, பழகிய பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.

பிறகு விருந்து சாப்பிட்டும், குழு புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். சிறப்பு விருந்தினராக புதூர் காவல் ஆய்வாளர் ஆய்வாளர் மாடசாமி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியை தலைமைக் காவலர் செந்தில் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

x