நாகை, மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 37 பேர் கைது


கோப்புப்படம்

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 37 மீனவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர். மேலும், 3 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 37 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று, நெடுந்தீவு கடல் பகுதியில் நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 படகுகளையும் சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 37 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும்,3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட 37 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்களை இன்று (செப். 22) காலை யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

x