செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 8 தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 8 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை முழுவதுமாக மிக்ஜாம் புயல் புரட்டிப் போட்டுவிட்டு கடந்திருக்கிறது. சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் இன்னும் வடியாத நிலையில், திரும்புகிற இடங்களில் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதே நிலைதான் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது.

இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த தாலுகாக்களில் வெள்ளநீர் வடியாததால் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய தாலுகாவில் நாளை வழக்கம்போல் கல்வி நிறுவனங்கள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


பாபர் மசூதி இடிப்பு தினம்; டிசம்பர் 6... கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு!

x