திராவிட நாகரிகம் பற்றிய வரலாறு கண்டறிந்த சர் ஜான் மார்ஷலுக்கு நன்றி: முதல்வர் ஸ்டாலின்


சென்னை: சிந்துவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்று 100ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து அறிவித்த சர் ஜான் மார்ஷலை நன்றிப் பெருக்குடன் நினைவுகூர்வதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

மிகச்சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, 1924-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி சர் ஜான் மார்ஷல் சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்து, இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை என்றென்றைக்குமாக மாற்றி வடிவமைத்தார். ஜான் மார்ஷலின் பங்களிப்பை நன்றிப் பெருக்குடன் நினைவுகூர்ந்து அவருக்கு இந்நாளில் நன்றி கூறுகிறேன்.

சரியான தீர்மானத்துடன்... சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் சரியான தீர்மானத்துடன் அதை அவர் திராவிட இனத்துடன் தொடர்புபடுத்தினார்.

வரலாற்று சிறப்புமிக்கது: வரலாற்று சிறப்புமிக்க இந்த கண்டுபிடிப்பின் நூற்றாண்டை முன்னிட்டு ஒரு பன்னாட்டு கருத்தரங்கு நடத்தப்படும். தமிழகத்தில் ஜான் மார்ஷல் முழு உருவ சிலை நிறுவப்படும் என்று ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

x