முறைகேடு புகார்: புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 


புதுச்சேரி: முறைகேடு புகார் எதிரொலியாக புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுவை அண்ணாநகர் வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகத்தில் புதுவை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவலகம் உள்ளது. இங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து சிபிஐக்கு புகார்கள் சென்றது.

இந்த புகாரின் பேரில் சென்னையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கிருந்து கோப்புகளை அவர்கள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அலுவலகத்தை புகைப்படம், வீடியோ எடுக்க பத்திரிகையாளர்கள் சென்றனர். அவர்களை அலுவலக செக்யூரிட்டிகள் படம் எடுக்கவிடாமல் மிரட்டி தடுத்து அனுப்பினர்.

x