காஞ்சிபுரத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை கண்காட்சி தொடக்கம்: 30% சிறப்புத் தள்ளுபடி


காஞ்சிபுரத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை தொடங்கி வைக்கிறார் மாவட்ட ஆட்சியர் கலை்செல்வி.

காஞ்சிபுரம்: தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுவு சங்கம் சார்பில் காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டியையொட்டி சிறப்பு விற்பனை கண்காட்சி இனறு (செப். 20-ம் தேதி) தொடங்கியது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935-ம் ஆண்டில் துவங்கப்பட்டது. இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

பாரம்பரிய மிக்க நெசவுத் தொழிலில் நவீன உத்திகளை கையாண்டு அறிய வேலைப்பாடுகளுடன் கூடிய கைத்தறி ரக சேலைகள், புதிய வடிவமைப்பிலும் ஆர்கானிக் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. மேலும் பருத்தி இரக சேலைகள், லுங்கிகள், போர்வைகள், திரைச்சீலைகள், துண்டுகள், கைக்குட்டைகள், வேட்டிகள், ரெடிமேட் சட்டைகள், குர்தீஸ் போன்றவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கோ-ஆப்டெக்ஸ் வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சித்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 12 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூபாய் 7.08 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான விற்பனை இலக்காக வேலூர் மண்டலத்திற்கு ரூபாய் 8.50 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் கடந்த ஆண்டு ரூ.73.28 லட்சம் விற்பனை செய்தது. இந்த ஆண்டுக்கு ரூ.1.15 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சார்பில் 30 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டோன் மேட் ஸ்கிரீன் துணிகள் தலையணை உறைவுடன் கூடிய படுக்கை விரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்தக் கண்காட்சி தொடக்க விழாவில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டப்பரேவை உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் (உற்பத்தி & பகிர்மானம்) சு.ஞானபிரகாசம், கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் ச.பெருமாள், மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.


x