புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகே பிரபல காபி பார் அகற்றம்


புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகே நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பிரபல காபி பார் உள்ளிட்ட கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.

புதுச்சேரி: நடைபாதையை ஆக்கிரமித்து, புதுவை தலைமைச்செயலகம் அருகே கட்டப்பட்டிருந்த பிரபல காபி பார் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். புதுவை கடற்கரை சாலையையொட்டி தலைமைச்செயலகத்தின் அருகே பிரபல காபி பார் உள்ளது. இதன் கிளைகள் நகரின் பல பகுதிகளில் அமைத்துள்ளன. தலைமைச் செயலகத்தையொட்டி நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள இந்த காபி பார் கிளைபல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்த காபி பாரின் மேற்கூரையில் மரக்கிளை விழுந்துசேதமடைந்துள்ளது. சேதமடைந்த மேற்கூரையை மாற்ற காபி பார்உரிமையாளர்கள் ஏற்பாடுசெய்தனர். இந்த நிலையில்புதுவை நகராட்சியின் எந்தவிதஅனுமதியுமின்றி, நடைபாதையைஆக்கிரமித்து காபி பார் இயங்கு வதாக புகார் சென்றது.

இதன்பேரில் நகராட்சி அதிகாரிகள், போலீஸார் துணையோடு அந்தக் கடையை அகற்ற பொக்லைன் இயந்திரத்தோடு வந்தனர். கடை உரிமையாளருக்கு ஆதரவாக சிலர் அங்கு திரண்டனர்.

நகராட்சி அதிகாரிகள், ஊழி யர்களிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். நகர் முழுவதும் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் உள்ளன. இந்தக் கடையை மட்டும் அகற்றுவது ஏன்? உரிய முறையில் நோட்டீஸ் கொடுத்து அகற்ற வேண்டும்.

திடீரென பொக்லைன் இயந்திரத்தை கொண்டுவருவதில் என்னநியாயம்? என்று கேள்வி எழுப்பினர். ஆனால் இதை அதிகாரிகள் ஏற்கவில்லை. அந்த காபி பார்அகற்றப்பட்டது.

இதுதொடர்பாக புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி கூறுகையில், " புதுவை தலைமைச்செயலகம் அருகேயிருந்த காபிகடை அகற்றப்பட்டது. பிளாட்பார்மில் உள்ள கடைகளின் விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது" என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் புதுவையில் அதே இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மேலும் 5 கடை கள் நேற்று அகற்றப்பட்டன. அதே இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 கடைகள் அகற்றப்பட்டன.

x