அரியலூர்: அண்ணா பிறந்தநாள் விழா - கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


அரியலூர்: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி, அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு திமுக,அதிமுக, மதிமுக சார்பில் இன்று(செப்.15) மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

திமுக சார்பில்: திமுக சார்பில் நகரச் செயலாளர் ரா.முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, நகர் மன்றத்தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, ஒன்றியச் செயலாளர்கள் அறிவழகன், அன்பழகன், கென்னடி, அசோக சக்கரவர்த்தி உட்பட பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதிமுக சார்பில்: மதிமுக சார்பில் அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன், மாவட்டச் செயலாளர் ராமநாதன், ஒன்றியச் செயலாளர் சங்கர் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில்: அதிமுக சார்பில் முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன், மாவட்ட அவைத் தலைவர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், மாவட்ட பொருளாளர் அன்பழகன், நகரச் செயலாளர் செந்தில் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள அண்ணா சிலைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

x