ஓசூர் அருகே பரிதாபம்... மின்கம்பியில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு!


உயிரிழந்து கிடக்கும் யானை

ஓசூர் அருகே தாவரக்கரை கிராம பகுதியில் மின்சாரம் தாக்கியதில் பெண் யானை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தாவரக்கரை கிராமத்தில் ஓசூரை சேர்ந்த பால் நாராயணன் என்பவர் கோழி பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில் இருந்த ஒரு மின்சார கம்பத்தில் இருந்து அருகில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை போர்வெல்லுக்கு தரை வழியாக மின்சார ஒயர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நொகனூர் வனப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் உணவு தேடி வெளியேறிய பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் கோழிப்பண்ணை அருகே வந்துள்ளன. அப்போது கோழி பண்ணையில் ஆழ்துளை போர்வெல்லுக்கு கொண்டு செல்லப்பட்ட மின்சார கம்பி ஒரு யானையின் கால்களில் சுற்றி உள்ளது இதில் யானை அந்த மின்சார கம்பியை கடித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மற்ற யானைகள் அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு சென்று விட்டன.

குற்றம்

காட்டு யானை உயிரிழந்தது குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் உயிரிழந்த காட்டு யானை பெண் காட்டு யானை எனவும், சுமார் 10 வயது மதிக்கத்தக்கது எனவும் தெரியவந்தது இது குறித்து தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தக் கோழிப்பண்ணை நடத்தி வரும் அதிமுக கவுன்சிலர் பால் நாராயணனிடம் இதுகுறித்து வனத்துறை தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

x