வானிலை எச்சரிக்கை: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை


கோப்புப் படம்

ராமேசுவரம்: வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினர் தடை விதித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜல சந்தி கடற்பகுதிகளில் மணிக்கு 30 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையிலும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து இன்று ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் மற்றும் தனுஷ்கோடி கடற்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், நாட்டுப் படகுகளும் கடலுக்குச் செல்லாமல் ஆழம் குறைந்த பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.

x