விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற கோரிக்கை


சென்னை: போராட்டத்தின்போது விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என உள்துறை செயலரிடம் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவிரியில் வெள்ளம் வந்து நீர் அனைத்தும் வயலுக்கு வராமல் கடலில்கலந்தது. கடைமடைக்கு நீர்வரவில்லை என ஆட்சியர்கள், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளோம்.

உரிய நேரத்தில் நீர் திறக்காததை சுட்டிக்காட்டி, சங்கத்தின் சார்பாக கர்நாட அரசிடமிருந்து ரூ.1 லட்சம் கோடி நஷ்டஈடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இதற்காக போராட்டமும் நடத்த இருக்கிறோம். அதேநேரம், முன்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது 136 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் 80 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என உள்துறைச் செயலரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்

x