பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் 2 நாட்களில் வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்


கொடைக்கானல்: தமிழகத்தில் பள்ளி நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக 2 நாட்களில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், மாநிலங்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவதை ஏற்க முடியாது. கொள்கையை விட்டுக் கொடுத்து, கல்வி நிதியைப் பெற வேண்டிய அவசியம் இல்லை.

15,000 ஆசிரியர்களுக்கு... தேசிய கல்விக் கொள்கை மூலம்பாஜக தங்களது சித்தாந்தத்தை பள்ளிகளுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. மத்திய அரசுவழங்க வேண்டிய கல்வி நிதியைநிறுத்தி வைத்துள்ளதால், தமிழகத்தில் 15,000 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களிடம் அறிவுசார்ந்தவிஷயங்களை கொண்டு சேர்க்கும்நிலையில், பேச்சாளர் மகாவிஷ்ணு போன்றவர்கள் மாணவர்களிடம் மூட நம்பிக்கைகளைத் திணிப்பதை ஏற்க முடியாது. கல்வியில் மதம்கலக்கக் கூடாது. பள்ளி நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து 2 நாட்களில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

x