2025 டிசம்பருக்குள் அதிமுகவில் ஒற்றுமை ஏற்படும்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நம்பிக்கை


தஞ்சாவூர்: 2025 டிசம்பருக்குள் அதிமுக ஒற்றுமையாகும் என ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் நம்பிக்கை தெரிவித்தார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது:

அதிமுகவில் உள்ள 99.9 சதவீத தொண்டர்கள் கட்சி ஒன்றாக இணைய வேண்டும் என்றும், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சிஅமைய வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். அந்த எண்ணத்தை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

பழனிசாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஆனால், அதிமுக இணையக் கூடாது என விரும்புவர்கள் தானாகவே கட்சியை விட்டு வெளியேறி விடுவார்கள். இதுகாலத்தின்கட்டாயம். 2025 டிசம்பருக்குள் அதிமுக ஒற்றுமையாகும், 2026-ம் ஆண்டுசட்டப் பேரவைத் தேர்தலில் நிச்சயம் அதிமுக ஆட்சி அமைக்கும். ஒற்றை தலைமையா? இரட்டைதலைமையா? என்பது அதிமுக இணையும்போது முடிவுக்கு வரும். கடந்த தேர்தல்களில் பழனிசாமியின் தொடர் தோல்விகளை பார்த்துதான், அதிமுகவை பழனிசாமி அழித்துவிடுவார் என்று டிடிவி.தினகரன் குறிப்பிட்டார். அது உண்மைதான். இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.

x