மிலாடி நபி கொண்டாட்டம்: செப்.17-ல் பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: மிலாடி நபி செப்.17-ம் தேதி கொண்டாடப்படுவதாக அரசு தலைமை காஜி அறிவித்ததை தொடர்ந்து, அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 16-ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் கடந்த 4-ம் தேதி மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை தெரியாததால், செப்.16-ம் தேதிக்கு (திங்கள்கிழமை) பதிலாக, மறுநாள் செப்.17-ம் தேதி (செவ்வாய்கிழமை) மிலாடி நபி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சமீபத்தில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, செப்.17-ம் தேதி அரசு விடுமுறை நாளாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், செப்.16-ம் தேதிக்கு பதிலாக, செப்.17-ம் தேதி மிலாடி நபி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த பொது விடுமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

x