ஆழ்கடல் மீன்பிடி படகு ஓட்டுநர் உரிமத்துக்கான தேர்வு @ ராமேஸ்வரம்


ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் ஆழ்கடல் மீன்பிடி படகு ஓட்டுநர் உரிமத்திற்கான தேர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், தொழில்சார் பயிற்சி இயக்குநரகம், ராமநாதபுரம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து ‘ஆழ்கடல் மீன்பிடித் தொழில்நுட்பம்’ பயிற்சியை மீனவர்களுக்கு வழங்கி வருகின்றன.

இந்தப் பயிற்சியில் கலந்துகொண்ட 15 மீனவர்களுக்கு முதற்கட்டமாக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இன்று நடைபெற்றது.

மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் அப்துல் காதர் ஜெய்லானி, சிவகுமார் மற்றும் மீன்வள ஆய்வாளர்கள் தேர்வினை நடத்தினர். மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, தொழில்சார் பயிற்சி இயக்குநரகத்தின் பொறியாளர் சிவசுடலைமணி ஆகியோர் தேர்வினை ஆய்வு செய்தனர்.