50.45 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை


சென்னை: சென்னை துறைமுகம் கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிக அதிக அளவாக 50.45லட்சம் டன் சரக்குகளை கையாண்டு சாதனைப் படைத்துள்ளது.

இதேபோல், கடந்த மாதம் 20 அடி நீளமுள்ள 1.70 லட்சம் சரக்கு கன்டெய்னர்களையும் கையாண்டுள்ளது. மேலும், கடந்த மாதம் 31-ம் தேதி ஒரே நாளில் 23,534 டன் எஃகு கையாளப்பட்டு சாதனைப் படைத்துள்ளது.

இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக துறைமுக ஊழியர்கள், அதிகாரிகள், சென்னை கன்டெய்னர் டெர்மினல் நிறுவனம், சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் நிறுவனம், எலைட் ஷிப்பிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு, சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

x