அனகாபுத்தூர் | அனுமதியின்றி வைக்கப்பட்ட நடிகர் விஜய் கட் அவுட் அகற்றம்


அனகாபுத்தூர்: பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் உள்ள வெல்கோ திரையரங்கில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் செப். 5-ம் தேதி திரையிடப்படுவதை முன்னிட்டு இந்த திரையரங்கின் வெளியே சாலையில் 20 அடி உயரத்துக்கு நடிகர் விஜய்யின் கட் அவுட் காவல்துறை அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதை அறிந்த போலீஸார் அதனை அகற்ற ரசிகர்களுக்கு அறிவுறுத்தினர்.

அப்போது ரசிகர்களுக்கு போலீஸாருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் கட் அவுட் அகற்றப்பட்டது. இந்நிலையில் கோட் திரைப்படம் திரைக்கு வரும்போது மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் என்று விஜய் அறிவுரை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

x