மீனவர்களை தொழில்முனைவோராக்க திட்டமிட்டு வருகிறோம்: ஸ்ரீதர் வேம்பு தகவல்


நாகப்பட்டினம்: மீனவர்களை தொழில்முனைவோராக்க திட்டமிட்டுள்ளதாக ஸோகோ நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் நம்பியார் நகர் மற்றும் ஆரியநாட்டுதெரு உள்ளிட்ட பல்வேறு மீனவக் கிராமங்களில் ஸோகோ பன்னாட்டு நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து, கோயில்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் வீடுகள் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. நாகை ஆரியநாட்டு தெரு மீனவக் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் மூகாம்பிகை கோயிலின் கட்டுமானப் பணிகளை, ஸோகோ நிறுவன தலைமைசெயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு நேற்று முன்தினம் இரவு பார்வையிட்டார். அவருக்கு அப்பகுதி மீனவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்ரீதர் வேம்பு கூறியதாவது: நாட்டின் வளர்ச்சியும், எதிர்காலமும் குழந்தைகளின் கைகளில்தான் உள்ளது. ஆன்மிகமும், அறிவாற்றலும் வளர கோயில்களைக் கட்டி எழுப்புவதுடன், சமுதாயக் கூடங்களையும் உருவாக்கி வருகிறோம். மீனவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள, மீன்களை, மதிப்புக் கூட்டி விற்பனைசெய்யவேண்டும். விருப்பமுள்ளமீனவர்களை தொழில்முனைவோராக்க திட்டமிட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்

x