கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம் @ அரியலூர்


அரியலூர் அண்ணா சிலை அருகே, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியுவினர்.

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் அண்ணா சிலை அருகே, கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியுவினர் இன்று (செப்.02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில், "அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவச தள்ளுவண்டி வழங்க வேண்டும். வெண்டர் கமிட்டி கூட்டத்தை மாதந்தோறும் நடத்த வேண்டும். வெண்டர் கமிட்டி உறுப்பினர்கள் 6 பேருக்கும் தனித்தனியாக அடையாள அட்டை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு ஓய்வறை, குடிநீர், இலவச கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும்.

அரியலூர் அண்ணா சிலை முதல் அரசு மேல்நிலைப் பள்ளி வரை உயர்கோபுர மின்விளக்கு வசதி அமைத்துத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு கிளைத் தலைவர் சோபியா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பி.ரெங்கராஜ், மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

x