விஜய் கட்சியில் இணைகிறாரா ரவீந்திரநாத்? - ஓபிஎஸ் மறுப்பு


திருநெல்வேலி: சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு தென்காசி மாவட்டம், நெல்கட்டும் செவலில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள்முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக உறுதியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை நிறுவும். சென்னையில் பூலித்தேவன் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். நடிகர் விஜய் கட்சியில் எனது மகன் ரவீந்திரநாத் சேரப்போவதாக கூறுவது தவறான செய்தி. இது திட்டமிட்ட சதி. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதைப் பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் இருந்து கனிமவளம் கொள்ளை போவது தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். சென்னையில் கார் பந்தயம் நடத்துவது தவறு என்று சொல்வது நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்

x