பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த ராம்குமார், குறிப்பான்குளத்தை அடுத்த காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்திவருகிறார். இங்குள்ள கட்டிடத்தில் நேற்று அரசர்குளத்தைச் சேர்ந்த முத்துகண்ணன் (21),கமுதி விஜய் (25), புளியங்குளம் செல்வம் (26), செம்பூர் பிரசாந்த் (26), சின்னமதிகூடல் செந்தூர்கனி, முத்துமாரி ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருந்த அறைக்கு அருகேயுள்ள மற்றொரு அறையில் திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறின.அவற்றிலிருந்து வந்த தீப்பொறிகள் விழுந்ததில் தொழிலாளர்கள் இருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் வெடித்தன. இந்த விபத்தில் முத்துகண்ணன், விஜய் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், காயமடைந்த 4 பேரையும் மீட்டு, நெல்லை, சாத்தான்குளம் அரசு மருத்துவமனைகளில் சேர்த்தனர்

x