திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்  


திண்டுக்கல்லில் மத்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்கள்.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குமரேசன் தலைமை வகித்தார்.

செயலாளர் கென்னடி முன்னிலை வகித்தார். மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

x