காரைக்குடியில் தனியார் உணவக இட்லி சாம்பாரில் பல்லி - அரசு மருத்துவமனை நோயாளிகள் அதிர்ச்சி


காரைக்குடியில் தனியார் உணவகத்தில் வாங்கிய இட்லி சம்பாரில் கிடந்த பல்லி.

காரைக்குடி: காரைக்குடியில் தனியார் உணவகத்தில் வாங்கிய இட்லி சாம்பாரில் இறந்த நிலையில் பல்லி கிடந்ததால் அரசு மருத்துவமனை நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சூரக்குடி சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தங்கியுள்ள நோயாளிகள், பாலூட்டும் தாய்மார்கள் என 5 பேருக்கு நேற்று அருகேயுள்ள உணவகத்தில் இட்லி வாங்கியுள்ளனர். அவற்றை நோயாளிகள் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, ஒருவரது இட்லி சாம்பாரில் மட்டும் பல்லி கிடந்தது. இதனால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். சாம்பாரில் இறந்த நிலையில் பல்லி கிடந்தது குறித்து உணவகத்தில் கேட்டுள்ளனர்.

ஆனால், அவர்கள் முறையான பதிலளிக்கவில்லை. இதையடுத்து நோயாளிகள் சம்பந்தப்பட்ட உணவகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். மேலும் அரசு மருத்துவமனையில் தரமற்றமுறையில் உணவு வழங்குவதால் தான் வெளியில் வாங்க வேண்டியுள்ளது. இதனால் தரமான உணவு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

x