முதலமைச்சர் கோப்பை: முன்பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு


சென்னை: தமிழகம் முழுவதும் ‘முதலமைச்சர் கோப்பை-2024’ விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

மொத்தம் 25 வகையான விளையாட்டுகளுடன் 5 பிரிவுகளின்கீழ் நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த 4-ம் தேதி விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்ப பதிவுகள் நேற்றுடன் (ஆக.25) முடிவடைந்தது. இந்நிலையில் ஆன்லைன் முன்பதிவுக்கான அவகாசம் செப்.2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தாங்களாகவோ, தங்களது பள்ளி, கல்லூரி மூலமாகவோ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். ‘ஆடுகளம்’ மையத்தை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

x