போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் தமிழகம் முழுவதும் நாளை மறியல்


கோப்புப் படம்

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை மறியல் போராட்டம் நடத்தப் போதவதாக போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் கூறியதாவது: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பிரச்சினை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

ஓய்வூதியர்களுக்கு 106 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், மேல்முறையீடு செய்து அரசு காலம் தாழ்த்துகிறது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஓய்வுபெற்றோருக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை. மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை.

இந்த பிரச்சினைகளில் விரைந்து தீர்வு காண வலியுறுத்தி, ஆக.16 முதல் வீடுதோறும் தொழிலாளர்களிடமும், பொதுமக்களிடமும் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சார இயக்கத்தை நடத்தியுள்ளோம்.

இதன்தொடர்ச்சியாக நாளை (ஆக.27) தமிழகம் தழுவிய அளவில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளோம். சென்னையில் பல்லவன் இல்லம் அருகே மறியல் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

x