திருப்பூர் துயரம்: மழைநீர் தேங்கிய பள்ளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு


சக்திவேல்

திருப்பூர்: திருப்பூர் பவானி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. தம்பதிக்கு சக்திவேல் (3) என்ற குழந்தை இருந்தது. பனியன் நிறுவனத்துக்கு நேற்று கிருஷ்ணகுமார் சென்றிருந்த நிலையில், சங்கீதா மற்றும் மகன் சக்திவேல் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், மதியம் குழந்தையை வீட்டில் அமரவைத்துவிட்டு, துணிகளை காய போடுவதற்காக சங்கீதா சென்றுள்ளார். அப்போது, வீட்டின் அருகே மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் சிறுவன் தவறி விழுந்துள்ளான்.

பணிகளை முடித்து வந்து குழந்தையை சங்கீதா தேடி பார்த்தபோது, பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மயங்கிய நிலையில் குழந்தை இருந்துள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில், ஏற்கெனவே சிறுவன் சக்திவேல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

x