கும்பகோணம்: அரசு கல்லூரி மாணவர்கள் 5வது நாளாக தொடர் போராட்டம்


கும்பகோணம்: கும்பகோணம் அரசு கல்லூரியில் பணிபுரிந்து வரும் தமிழ்த் துறை பேராசிரியரைக் கண்டித்தும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, மாணவ, மாணவிகள் 5வது நாளாக இன்றும் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியின் முதுநிலை தமிழ்த் துறை பேராசிரியர் ஜெயவாணிஸ்ரீ. இவர் முதுநிலை தமிழ்த்துறை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, சாதிய ரீதியாகவும், மாணவிகளை தரக்குறைவாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதனிடையே, பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள், கல்லூரி முதல்வரிடம் அண்மையில் கடிதம் அளித்துள்ளனர். இதுவரை பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கைவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, இளைஞர் அரண் சார்பில், கல்லூரி அணித் தலைவர் சாமின்ராஜ் தலைமையில், செயலாளர் தனுஷ்குமார், ஊடகப் பிரிவு நிர்வாகி ஆகாஷ், ஒருங்கிணைப்பாளர் கார்த்தி மற்றும் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 5-வது நாளாக, கல்லூரி வாயிலில் அமர்ந்து பேராசிரியரை கண்டித்தும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர்.

x