சென்னை கமிஷனர் அலுவலக பிஆர்ஓ உட்பட 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம்


சென்னை: எழும்பூர் மற்றும் வடபழனி சரகங்களின் காவல் உதவி ஆணையர்கள் மனோஜ்குமார், அருள் சந்தோஷ்முத்து ஆகியோர் சென்னை நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

செம்பியம் சரக உதவி ஆணையர் பிரவீன் குமார் பாதுகாப்பு பிரிவுக்கும் பயிற்சி மற்றும் நவீன மயமாக்கல் பிரிவு உதவி ஆணையராக இருந்து வந்த சையது பாபு, தரமணி சரகத்துக்கும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த அனந்தராமன் வடபழனி சரகத்துக்கும் காவல் ஆணையர் அலுவலக செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த விஜயராமுலு கிண்டி காவல் சரகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல் அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்களை போன்று சென்னை முழுவதும் 19 காவல் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

x