தமிழக முதல்வரின் இணைச் செயலாளராக லட்சுமிபதி நியமனம்; தூத்துக்குடி ஆட்சியரானார் இளம்பகவத்!


சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இணை செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

முன்னதாக நேற்று தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக, தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார். இந்த மாற்றதைத் தொடர்ந்து இன்று முருகானந்தம் புதிய தலைமைச் செயலாளராக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் 50-வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் முருகானந்தம். தலைமைச் செயலகத்தில் அவரது அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கினார்.

இதையடுத்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அறிவிப்பில், முதலமைச்சரின் இணைச் செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x