பவுனுக்கு ரூ.840 உயர்வு: ரூ.53 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை


சென்னை: தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. ஒரே நாளில்தங்கம் பவுனுக்கு ரூ.840 அதிகரித்து ரூ.53,360-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மீண்டும் ஏற தொடங்கியுள்ளதை கண்டு நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் ஏறத்தொடங்கி உள்ளது. இதன்படி, தங்கம் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.105 அதிகரித்து ரூ.6,670-க்கும்,பவுனுக்கு ரூ.840 அதிகரித்துரூ.53,360-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட்சுத்தத் தங்கத்தின் விலை சவரன்ரூ.57,000-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.91-க்குவிற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.91,000 ஆக உள்ளது. கடந்த சில நாட்கள் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் அதிரடியாக விலை அதிகரித்திருப்பதைக் கண்டு நகை வாங்குபவர்கள் கவலை அடைந்துள்ளனர்

x