டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெற்ற பொறியியல் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு: நேர்முகத் தேர்வுக்கு 644 பேர் அனுமதி


சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நேர்முகத் தேர்வுக்கு 644 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உள்ளடக்கியபதவிகளில் 358 காலியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த ஜனவரி 6 மற்றும் 7-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. அடுத்தகட்ட தேர்வான நேர்முகத் தேர்வுக்கு 644 பேர்அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

x