கண்காணிப்பாளர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை


ராஜேஷ் லக்கானி

சென்னை: பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் மின் விபத்துகள் தொடர்ந்து நடப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி, பணியின் போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தும் புகைப்படத்தை அது தொடர்பான செயலியில் ஊழியர்கள் பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யாத நிலையில், உயிரிழப்புகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளருக்கு கட்டாய ஓய்வு, இடைநீக்கம், பணிநீக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும். எனவே, பாதுகாப்பில் கவனம் செலுத்தி, வழிகாட்டுதல்களை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

x