சுதந்திர தின விழா | திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் சமபந்தி விருந்து


சமபந்தி விருந்து

திண்டுக்கல்: சுதந்திர தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அபிராமி அம்மன் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

திண்டுக்கல் நகரின் மையத்தில் அமைந்துள்ள அபிராமிஅம்மன் கோயிலில், சுதந்திர தினவிழா கொண்டாட்டமாக அம்மன் உருவப்படம், தேசியக்கொடி வைக்கப்பட்டு தேசம் நலன் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி சொற்பொழிவு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க தலைவர் ராமசாமி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சண்முகவேல், வீரக்குமார், மலைச்சாமி, இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் சுரேஷ், கோயில் செயல் அலுவலர் தங்கலதா, திருக்கோயில் குருக்கள் குருநாதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

x