முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘நாடாளுமன்ற தேர்தல் 2024 – 40/40 தென் திசையின் தீர்ப்பு’ நூல் நாளை வெளியீடு


சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘நாடாளுமன்றத் தேர்தல் 2024 – 40/40 தென் திசையின் தீர்ப்பு’ என்ற வரலாற்று தேர்தல் ஆவண நூல் சென்னையில் நாளை வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையே நடந்த போர்தான் 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல். ‘400 இடங்களை கைப்பற்றுவோம்’ என்று சொன்ன பாஜகவை தனித்து அரசு அமைக்க முடியாத நிலைமையை உருவாக்கியது இந்தியா கூட்டணி.

2024 மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்குநாற்பது வெற்றியை திமுக கூட்டணி எப்படிச் சாத்தியமாக்கியது? முதல்வர் அமைத்த தேர்தல் வியூகம், கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நடந்த தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவரங்களை விவரிக்கிறது ‘தென்திசையின் தீர்ப்பு’ புத்தகம். நாற்பதுக்கு நாற்பது வரலாற்றுச் சாதனை போல இந்தப் புத்தகமும் ஓர் வரலாற்றுத் தேர்தல் ஆவணம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

x