தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பு ராஜினாமா


சென்னை: தமிழ்த் திரைப்பட நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு, கடந்தஆண்டு தேசிய மகளிர்ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந் நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில்போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதையடுத்து, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் சில நாட்கள் ஈடுபட்டார். தொடர்ந்து, உடல் நிலை காரணமாக பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த குஷ்பு, சமூகவலைதளங்கள் வாயிலாக பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்நிலையில், அவர்கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி, தேசிய மகளிர்ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமாசெய்வதாக ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இக்கடிதத்தின் அடிப்படையில் குஷ்புவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாகமத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது

x