குமரியில் மூவர்ணக் கொடி வண்ணத்தில் ஜொலிக்கும் காந்தி மண்டபம்!


கன்னியாகுமரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண மின்னொளியில் ஜொலிக்கும் காந்தி மண்டபம்.

நாகர்கோவில்: சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவண்ணக் கொடியின் வண்ணத்தில் ஜொலிக்கும் கன்னியாகுமரியில் காந்தி, காமராஜர் மணிமண்டபம்.

சுதந்திர தினவிழா கொண்டாட்டத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் 15-ம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். இதைப்போல் கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் 150 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது.

இதற்கான ஒத்திகை நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம் ஆகியவை தேசியக் கொடியின் மூவர்ண ஒளி அமைப்புடன் காட்சி அளித்தன. இரவு நேரத்தில் மண்டபங்கள் மூவர்ணத்தில் ஜொலித்தன. இதை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

x