ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் காலை 6 மணி அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக பதிவானது. அன்று மாலையிலும் அதே அளவுடன் நீர் வரத்து தொடர்ந்தது.

இந்நிலையில், நேற்று காலை 6 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உயர்ந்திருந்தது. மாலை 6 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து மேலும் அதிகரித்தது.

x