வக்பு சட்ட திருத்த மசோதா: குஷ்பு வரவேற்பு


சென்னை: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:

வக்பு சட்டத் திருத்த மசோதா,பெண்களின் உரிமையை பாதுகாக்கும். அதேவேளையில், வக்பு நிர்வாகத்தின் செயல்திறனையும் கணிசமாக மேம்படுத்தும். இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்புவது ‘சப்கா சாத் சப்கா விகாஸ்’ என்ற முழக்கத்துக்கு அரசு அர்ப்பணிப்புடன் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இது சமத்துவமான சமூக நீதியை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை குறிப்பதாகும்.

பிரதமர் மோடி வழிகாட்டுதலின்கீழ் இந்த முயற்சி வக்பு நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும். பெண்களின் உரிமை நிலைநிறுத்தப்படும். இஸ்லாமியசமூகத்தை சேர்ந்த பெண்ணாக,இந்த மசோதாவை பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய பாதையாக பார்க்கிறேன்

x