வழக்குகளில் உண்மை வெளியே வருவதற்கு அர்ப்பணிப்பு, நேர்மையுடன் வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும்: நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அறிவுரை


சென்னை: வழக்குகளில் உண்மை வெளியேவர வேண்டுமென்றால் வழக்கறிஞர்கள் அர்ப்பணி்ப்பு உணர்வுடனும், நேர்மையுடனும் செயல்பட வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசின் சட்டத்துறை மற்றும்மெட்ராஸ் பார் அசோசியேஷன்இணைந்து நடத்தும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான 3 நாள்பயிலரங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று தொடங் கியது.

இந்த பயிலரங்கை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் தமிழக அரசின்சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர், மெட்ராஸ் பார்அசோசியேஷன் தலைவர் பாஸ்கரன், சட்டக்கல்வி இயக்குநரக இயக்குநர் பேராசிரியர் ஜெ.விஜயலட்சுமி, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் கவுரி ரமேஷ் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஆங்கிலத்தில் பேச தயக்கம்: இந்நிகழ்வில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசியதாவது: வழக்காடுவது என்பது ஒரு கலை. அந்தக் கலையை அனைத்து இளம் வழக்கறிஞர்களும் தங்களுக்கானதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். வழக்கறிஞராக தான் பணியைத் தொடங் கிய போது, ஆங்கிலத்தில் நீதி மன்றத்தில் பேச தயக்கமும், அச்சமும் இருந்தது. ஆனால் அதை சரி செய்து கொண்டதால் தற்போது நீதிபதியாக உள்ளேன்.

புத்தகம் வாசிக்கும் பழக்கம்: இளம் வழக்கறிஞர்கள் அதிகமாக புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையும், எதையும் ஆழமாக கூர்ந்து கவனிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வழக்கை நீதிமன்றத்தில் நடத்தும் முன்பாக, அதன் சாராம்சத்தை நீதிபதிகளுக்கு எளிமையாக விளக்க கதை போல் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ளவும், வாதத்தை தெளிவாக எடுத்து வைக்கவும் முடியும்.

மேலும் நீதிமன்ற விசாரணை யின்போது நீதிபதிகளின் கேள்விக்கு உகந்த பதில்களை வழங்கினாலே வழக்கில் விரைந்துதீர்வு காணலாம். வழக்குகளில் உண்மையை வெளியே கொண்டுவர வழக்கறிஞர்கள் நேர்மையுட னும், அர்ப்பணிப்புடனும் செயல் பட வேண்டும். இவ்வாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

x