பார்த்தசாரதி கோயிலின் வணிக வளாகத்தை உதயநிதி திறந்து வைத்தார்


சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்கு சொந்தமான 18 இடங்களில் உள்ள சிதிலமடைந்த வாடகை குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய வணிக வளாகம், குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருவல்லிக்கேணி, துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ரூ. 3.22 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் மற்றும் பொன்னப்பன் சந்தில் ரூ.19.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் என மொத்தம் ரூ.3.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு வணிக வளாகங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

x