திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு


திண்டுக்கல்லில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுதின அமைதி ஊர்வலம்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 -ம் ஆண்டு ஆகஸ்டு 7-ம் தேதி காலமானார். அவரது 6வது ஆண்டு நினைவு இன்று தமிழகமெங்கும் அனுசரிக்கப்படுகிறது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இருந்து கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் தலைமையில் திமுகவினர் கட்சி அலுவலகம் வரை அமைதி ஊர்வலம் சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் காந்தி ராஜன் எம்.எல்.ஏ., மேயர் இளமதி, துணேமேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

x