பரமக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு: தலைமை மருத்துவர் பணியிடமாற்றம்!


பணியில் சுணக்கம் காட்டியதால் பரமக்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் சரிவர இல்லை, முக்கியமாக சிடி ஸ்கேன் அறை சுத்தமாக இல்லாமல் நோய் தொற்று ஏற்படும் வகையில் இருந்தது.

மருத்துவமனை தலைமை மருத்துவர் தன் பணியில் சரிவர இல்லாமல் பொதுமக்கள் சுகாதாரத்திற்கு பாதகம் ஏற்படும் வகையில் பணி செய்ததால் அவரை உடனடியாக பணி மாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமல்லாது, இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் தொடர்பாக பணியில் சுணக்கம் காட்டியதற்கு விளக்கம் கேட்க மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனருக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

x