ஆவின் பால் விநியோகம் பாதிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை


சென்னை: அம்பத்தூர் பால் பண்ணையில் பராமரிப்பு பணி கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இப்பணி 20 நாட்கள் நடைபெறவுள்ளது. இதனால், பால் உற்பத்திக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

எனவே, சென்னையில் உள்ள மற்ற பால் பண்ணைகள் மற்றும் பாடலூர் பால் பண்ணையில் இருந்து சுமார் 1.50 லட்சம் லிட்டர்பால் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இதன்மூலமாக, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பால் விநியோகம் செய்ய அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

x