அப்துல் கலாம் நினைவு தினத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் @ சென்னை


சென்னை: சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 9-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கம் மற்றும் நண்பர்கள் நல அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை உதவிக்கரம் சங்க மாநிலத் தலைவர் ஆடிட்டர் டி.ஏ.பி.வரகுட்டி வழங்கினார்.

நிகழ்ச்சியில் உதவிக்கரம் சங்க மாநில பொதுச் செயலாளர் அரிமா டாக்டர் ஆவின் கி.கோபிநாத், பொருளாளர் எம்.பி.நந்தகுமார், நண்பர்கள் நல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் லயன் எஸ்.வி. முத்துராமன், பொருளாளர் கண்ணதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் டாக்டர் ஏ.பி. ஜே. அப்துல்கலாமின் உருவப் படத்திற்கு மலர்கள் தூவியும், மெழுவர்த்தி ஏற்றியும் மரியாதை செய்தனர்.

x