போக்குவரத்து கழகங்களில் 7 பேருக்கு பதவி உயர்வு: 5 பேருக்கு பணியிட மாற்றம்


கோப்புப்படம்

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் 7 துணை மேலாளர்களுக்கு பதவி உயர்வும், 5 பொதுமேலாளர்களுக்கு பணியிட மாற்றமும் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மதுரை மண்டல பொதுமேலாளர் சி.கே.ராகவன், கடலூர் மண்டலத்துக்கும், வேலூர் மண்டல பொதுமேலாளர் ஜெ.எட்வின் சாமுவேல், விரைவுபோக்குவரத்துக் கழகத்துக்கும், கடலூர் மண்டல பொதுமேலாளர் எஸ்.ராஜா, நாகப்பட்டினம் மண்டலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஈரோடு மண்டல பொதுமேலாளர் கே.ஸ்வர்ணலதா, கோவை போக்குவரத்துக் கழகத்துக்கும், உதகை மண்டல பொதுமேலாளர் ஏ.கணபதி, வேலூர் மண்டலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், துணை மேலாளர் பொறுப்பில் உள்ள 7 பேருக்கு முதுநிலை துணை மேலாளராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, அவர்கள் பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மதுரை போக்குவரத்துக் கழகதொழில்நுட்பப் பிரிவு பொதுமேலாளராக வி.கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி மண்டல பொதுமேலாளராக பி.பாலசுப்பிரமணியன், விழுப்புரம் மண்டல பொதுமேலாளராக டி.சதீஷ்குமார், சேலம் போக்குவரத்துக் கழகதொழில்நுட்ப பிரிவு பொதுமேலாளராக எஸ்.கலாவதி,திருப்பூர் மண்டல பொதுமேலாளராக வி.சிவக்குமார், மதுரைமண்டலபொது மேலாளராக பி.மணி, காரைக்குடி மண்டலபொதுமேலாளராக எஸ்.பி.கந்தசாமி ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x