சிபிசிஎல் நிறுவனத்தின் புதிய மேலாண்மை இயக்குநர் பொறுப்பேற்பு


சென்னை: மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக ஹெச்.சங்கர் பொறுப்பேற்றுள்ளார்.

இப்பதவியை ஏற்கெனவே வகித்து வந்த அரவிந்த் குமார், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநராக (சுத்திகரிப்பு நிலையங்கள்) பொறுப்பேற்றதையடுத்து, சங்கர் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபிசிஎல் நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளாக இயக்குநராக பணியாற்றி வரும் சங்கர், கூடுதல் பொறுப்பாக மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றுவார்.

இயந்திரவியல் பொறியியல் பட்டத்துடன் மேலாண்மையிலும் பட்டம் பெற்றுள்ள சங்கர், சிபிசிஎல் நிறுவனத்தின் நிர்வாகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் 30 ஆண்டுகளுக்குமேல் அனுபவம் பெற்றுள்ளார் என சிபிசிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

x