எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னை: எழும்பூர் ரயில் நிலைய அதிகாரிக்கு, மதுராந்தகம் தாலுகா புக்கத்துறை கிராமம் சமத்துவபுரத்தை சேர்ந்த மேகநாதன் என்பவரிடம் இருந்து ஒரு கடிதம்வந்துள்ளது. அதில், பாமகவைதரக் குறைவாக பேசிவரும் திமுகஅரசுக்கும், கட்சிக்கும் ஒரு பாடமாக. எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ள தாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, ரயில்வே போஸீஸார், மேற்கொண்ட சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. இதுகுறித்து எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிந்தனர். விசாரணையில், மேகநாதன் என்பவர் தபால் நிலையத்தில் வேலை செய்வதும், அவருடைய பெயரில் வேறுஒருவர் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

x