போதை பொருள் கடத்தலை தடுக்க காவல் ஆணையருடன் கடற்படை அதிகாரி ஆலோசனை


கடல் வழியாக நடைபெறும் போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பது உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து சென்னை காவல் ஆணையர் அருண், கடலோர பாதுகாப்பு மண்டலம் (கிழக்கு) கமாண்டர் டானி மைக்கேலுடன் நேற்று வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசித்தார்.

சென்னை: கடலோர பாதுகாப்பு மண்டல (கிழக்கு) ஐஜி,கமாண்டர் டானி மைக்கேல், சென்னை காவல் ஆணையர் அருணை நேற்று சந்தித்தார்.

அப்போது, கடல் வழியாக நடைபெறும் போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பது, கடலில் மீட்பு பணிகளை மேற்கொள்வது, நுண்ணறிவுத் தகவல்களை பகிர்வது உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு அம்சங்களை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும், கடல் வழியாக நடைபெறும் போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதை உறுதி செய்யும் வகையில் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை செய்வதற்கு ஏற்றவாறு, பாதுகாப்பு ஒருங்கிணைப்பு வழிமுறைகளை வகுப்பது குறித்தும்கலந்துரையாடினர்.

x