பாமாயில், துவரம்பருப்பு கொள்முதலுக்கு தமிழக அரசு டெண்டர்


கோப்புப்படம்

சென்னை: சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளுக்கு விநியோகம் செய்வதற்காக பாமாயில், துவரம்பருப்பு கொள்முதலுக்கு தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.

மக்களவை தேர்தல் கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில மாதங்களாக பொருட்களை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம்பருப்பு விநியோகம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்த 2 மாதங்கள் விநியோகத்துக்கான 4 கோடி பாமாயில் பாக்கெட்கள், 40 ஆயிரம் டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. குறுகிய கால ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

x